க.பொ.த உயர்தரம் மற்றும் அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்.!!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரம் மற்றும் அனைத்து பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் திகதி எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மின் தடை மற்றும் தகவல் தொடர்பு குறைபாடுகள் காரணமாக, இந்த செய்தி முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, பரீட்சைகள் தொடர்பான விசாரணைகள் அதிக அளவில் 1911 என்ற தொலைபேசி எண்ணுக்கு வருவதாக, இதை ஊடகங்கள், வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பான விளம்பரம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.