உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

புலமை சாதனையாளர்கள்; பழைய மாணவர்களால் கௌரவிப்பு.!!! 

(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)

நற்பிட்டிமுனை பிரின்ஸ் கல்லூரியின் பெருமைமிக்க பழைய மாணவர்கள், 5ஆம் தர புலமைப்பரீட்சையில் சிறந்து சாதித்து, கல்வியின் களத்தில் தங்களைத் திகழ்த்தியதற்காக கல்லூரியின் சார்பில் (13) மாண்புடன் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த மகிழ்வூட்டும் விழா, கல்லூரியின் பணிப்பாளர் கெளரவ ரியாஸ் அவர்களின் அவர்களின் தலைமையில் நடை பெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகர் கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் வெற்றியை வாழ்த்தி, அவர்களது எதிர்கால வெற்றிக்குத் தேவையான தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் தரும் ஆற்றல்மிக்க உரையொன்றை நிகழ்த்தினார்.

மேலும், YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா மற்றும் CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஸிம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு மாணவர்களை நேரில் பாராட்டினர்.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேசனின் உயர்மட்ட பிரதிநிதிகள் என பெருமளவிலானோர் இந்நிகழ்வில் பங்கேற்று, கல்லூரியின் ஒளி வீசிய சாதனையாளர்களுக்கு உற்சாக நிமிடங்களை வழங்கினர்.

இந்த விழா, வெற்றிக்குப் பின்னால் உள்ள உழைப்பையும், கடமையுணர்வையும் கொண்டாடும் ஒரு அரிய தருணமாகவும், இளைய தலைமுறையை கல்வி நோக்கி வழிநடத்தும் உந்துசக்தியாகவும் இந் நிகழ்வு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713989

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time