காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் குறைபாடுகளை கண்டறிவதற்காக; உயர் அதிகாரிகளினால் பரிசோதனை.!!!
(ஜே.கே)
பொலிஸ் நிலையங்களின் குறைபாடுகளை கண்டறிவதற்கான பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மீதான பரிசோதனை நேற்று (21) காலை மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல். முஹம்மத் ஜமீல் தலைமையில் இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ. ரத்நாயக்கவின் முன்னிலையில் இடம் பெற்ற பரிசோதனையின் போது பொலிசாரின் சீருடைகள் மற்றும் வாகனம் பொலிஸ் நிலையத்தின் கட்டிடங்கள் உட்பட பொலிஸ் நிலையத்தின் அனைத்து பிரிவுகளும் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டன.
பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பரிசோதனைகளை நடத்தினார்.
இதன்போது பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிசாரின் சீருடைகள் மற்றும் வாகனங்களிலுள்ள குறைபாடுகளையும் அவர் கண்டறிந்தமை குறிப்பிடத்தக்கது.










