சர்வதேச பெண்கள் சாதனை விருது பெற்றார்; அறுவைச் சிகிச்சை நிபுணர் – பாமதி ஞானசெல்வம்.!!!
களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை அம்பிளாந்துறையூரைச் சேர்ந்த டாக்டர் பாமதி ஞானசெல்வம் சர்வதேச பெண்கள் சாதனை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் கல்விக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு அசாதாராண பெண்ணான டாக்டர் பாமதி ஞானசெல்வன் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை அம்பிளாந்துறையில் பிறந்து உலகப் புகழ் பெற்ற அறுவைச் சிகிச்சை நிபுணராக உருமாறியிருக்கின்றார் .
இவருக்கு “குயீன் புக்” எனப்படும் சர்வதேச பெண்கள் அமைப்பு இவ்வருடத்துக்கான ‘பெண் சாதனையாளர்’ விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.