ஈரான் இராணுவ மூத்த அதிகாரி ஜம்ஷித் எஷாஹி கொல்லப்பட்டார்: குடும்பத்தாரும் உயிரிழப்பு.!!!
ஈரான் ஆயுதப் படைகளின் மூத்த அதிகாரியும், பொதுப் படைத் தலைமைத் தளபதியின் ஆலோசகருமான மேஜர் ஜெனரல் ஜம்ஷித் எஷாஹி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) தலைமைத் தளபதி இந்தத் தகவலை இன்று (31) உறுதிப்படுத்தியுள்ளார்.
தெஹ்ரானின் ஓஸ்கோல் ) பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜம்ஷித் எஷாஹி கொல்லப்பட்டார்.
இத்தாக்குதலின் போது அவருடன் இருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ஆயுதப் படைகளின் நிதி மற்றும் பட்ஜெட் விவகாரப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர். ஈரானின் ஏவுகணைத் திட்டங்களுக்கான நிதி மற்றும் எண்ணெய் வர்த்தகத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.
இந்த தாக்குதல் மத்திய கிழக்கில் ஏற்கனவே உள்ள பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.