நாடு முழுவதும் பேருந்து கட்டண உயர்வு – இன்று நள்ளிரவு முதல் அமுல்.!!!
பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், நாடு முழுவதும் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகின்றன.
இந்த கட்டண உயர்வைத் தொடர்ந்து, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூபாய் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பு காரணமாக இந்த கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.