உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஊடகத் துறையில் AI யின் பயன்பாடு தொடர்பில்; ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற – இலவச செயலமர்வு.!!!

(எம்.பஹத் ஜுனைட்)

கிழக்கு மாகாணத்தில் சமூக வலுவூட்டல் திட்டங்களைச் செயற்படுத்திவரும் ‘பிஸிலங்கா’ சமூகத் தொழில்முனைவு நிறுவனம் மற்றும், ‘நாஸ் கெம்பஸ்’ ஆகியன இணைந்து ஊடகவியலாளர்களுக்கான நவீனகால சவால்களுக்கு முகங்கொடுத்து நாட்டினைக் கட்டியெழுப்பும் விதமாக Artificial intelligence (AI) பற்றிய வழிகாட்டல் செயலமர்வு ஞாயிற்றுக் கிழமை (27) காத்தான்குடி நாஸ் கெம்பஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் ‘AI யோடு விளையாடு…’ என்ற தலைப்பில் இச் செயலமர்வில் பிஸிலங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் கே.எம்.மஸாஹி, விஸ்பெரி நிறுவனத்தின் பணிப்பாளர் ரிகாஸ் ஆகியோர் விரிவுரை வழங்கினர்.

குறித்த நிகழ்விற்கு நாஸ் கெம்பஸின் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் மற்றும் அல் மனாஸிக் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் மஸ்ஊத் ஹூஷிமி மற்றும் ஊடகவியலாளர்கள், ஊடகத் துறை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு பயண்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713963

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time