உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

காணாமல் போன மீன்பிடி படகு கரையொதுங்கியது; 2 மீனவர்கள் மாயம்.!!!

சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று இயந்திரப் படகுகளில், பலத்த காற்று மற்றும் புயல் காரணமாகக் காணாமல் போன ஒரு படகு இன்று காலை சிலாபம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக சிலாபம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், படகில் பயணித்த இரண்டு மீனவர்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
காணாமல் போன மீனவர்கள்:

காணாமல் போன மீனவர்கள் இருவரும் சிலாபம் வெல்ல கொலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று (ஜூலை 19) இரவு இலங்கை விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் கடற்பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

காணாமல் போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

மற்ற இரண்டு மீன்பிடி இயந்திரப் படகுகளில் சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.

ஒரு படகு பாறையில் மோதி சேதமடைந்தது. அதில் இருந்த மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். அந்தப் படகு கருகுபனே மீன்பிடி கிராமத்தில் கரையொதுங்கியுள்ளது.

மற்றொரு படகு புயல் காரணமாக கவிழ்ந்தது. அதில் இருந்த மீனவர்கள் முத்துப்பந்திய மீன்பிடி கிராமத்திற்குச் சென்று, அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன் சிலாபம் பகுதிக்குத் திரும்பி உள்ளனர்.

பலத்த காற்று மற்றும் புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளையும், பாதுகாப்பாக கரை சேர்ந்த மீனவர்களையும் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் நேரில் பார்வையிட்டு, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703313

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time