காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற பெருநாள் திடல் தொழுகை; 10000 க்கும் அதிகமான ஆண்களும், பெண்களும் பங்கேற்பு.!!!
(ஜே.கே)
இன்று மலர்ந்துள்ள புனித ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் மிகவும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரை திடலில் இடம்பெற்றது. சுமார் 10000 திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.செயினுலாப்தீன் மதனி பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் நடாத்தினார்.
பெருநாள் குத்பாவையொட்டி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.










