காத்தான்குடியில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பும்; மாபெரும் இரத்தான முகாமும்.!!!
(எம், ஏ.சீ.எம்.ஜெலீஸ்)
சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி (ஜுன் 14) காத்தான்குடி தள வித்தியாசாலை மற்றும் குருதிக் கொடையாளர்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து நடாத்தும் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பும், மாபெரும் இரத்தான முகாமும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நாளை (14) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
காத்தான்குடி தள வித்தியாசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் இரத்த தான நிகழ்வில் 2023இல் நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்படாத, 8 அல்லது அதற்கு மேல் இரத்த தானம் வழங்கிய ஆண்களும், 4 அல்லது அதற்கு மேல் உதிரம் வழங்கிய பெண் குருதி கொடையாளர்களுக்கும் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.