காத்தான்குடி மத்திய கல்லூரி உள்ளக வீதிகள் புணரமைப்புக்கு; 16.80 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!!!
காத்தான்குடி மத்திய கல்லூரியின் உள்ளக வீதிகள் அமைப்பதற்காக ரூ.16.80 மில்லியன் நிதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இந்த நிதி ஒதுக்கீடு, தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி செயற்குழுவின் சிபாரிசின் பேரில், போக்குவரத்து, அதிவேக நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்விதமான நிதியுதவி தொடர்பான ஒதுக்கீடு மற்றும் அதற்கான வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளான கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் யூ.கே. அப்துல்லாஹ், காத்தான்குடி அமைப்பாளர் எஸ்.எம்.ஏ. நஸீர் மற்றும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளரும், பொதுமக்கள் தொடர்பாடல் அமைப்பாளருமான எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி ஆகியோர் அண்மையில் பாடசாலைக்கு நேரில் விஜயம் செய்து, அதிபருடன் சந்தித்து கலந்துரையாடினர்.
இத்திட்டத்தின் கீழ் கல்லூரி வளாகத்தின் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன.


