காத்தான்குடியில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை; வழியனுப்பும் பொது வைபவம்.!!!
(எம்.எஸ் எம்.நூர்தீன்)
காத்தான்குடியில் இருந்து இம்முறை புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களை வழியனுப்பும் பொது வைபவம் இன்று (09) வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன ஏற்பாட்டில் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டார்.
விஷேட உரையை காத்தான்குடி சித்தீக்கியா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபரும் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளை தலைவர் மெளலவி அப்துல் கபூர் மதனி நிகழ்த்தியதுடன் விசேட துஆப் பிராத்தனையை மெளலவி அமீன் பலாஹி நிகழ்த்தினார்.







