காத்தான்குடி மீடியா போரத்தினால் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவிகளுக்கு கௌரவம்.!!!
எம்.ஐ.அப்துல் நஸார்
அண்மையில் வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற காத்தான்குடி மீடியா போரத்தின் மூன்று உறுப்பினர்களது பிள்ளைகளை கௌரவிக்கப்பட்டனர்
அம் மூவரையும் கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (24) காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் போரத்தின் உறுப்பினர் மௌலவி என்.எம்.எம்.நௌபர்
(பலாஹி) அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் போரத்தின் பொருளாளர் எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி உறுப்பினர்களான மௌலவி என்.எம்.எம்.நௌபர் மற்றும் (பலாஹி), ஏ.டீ.எம்.றியாஸ் ஆகியோரது புதல்வியர்கள் சித்தியடைந்தனர்.
அந்த வகையில் மொஹமட் நௌபர் ஆயிஷா, மொஹமட் றியாஸ் பாத்திமா றிபா மற்றும் மொஹமட் பஸால் ஜிப்ரி றிப்பத் சஜ்லா ஆகிய மாணவிகள் நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டனர்.
காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் சிறந்த கல்வி அடைவுகளைப் பெறும்போது அல்லது சாதனைகளை நிகழ்த்தும்போது அவர்களை கெரவித்து ஊக்கப்படுத்தவதை போரம் வழக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் போரத்தின் ஆயுட்காலத் தலைவர் மௌலவி எஸ.;எம்.எம்.முஸ்தபா (பலாஹி), பொருளாளர் எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி, முன்னாள் பொருளாளர் எஸ்.ஏ.கே.பழீலுர் ரஹ்மான், மௌலவி என்.எம்.எம்.நௌபர் (பலாஹி), ஏ.டீ.எம்.றியாஸ், எம்.எஸ்.எம்.ஸஜி, எம்.ஐ.ஏ.மஜீட், பி.எம்.பயாஸ், எம்.எம்.எம்.அஸீம் மற்றும் கௌரவம் பெற்ற மாணவிகளின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.