காத்தான்குடி மீடியா போரத்தின் 25 ஆவது வருட நிறைவும்; கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும்.!!!
(எம்.ஐ.அப்துல் நஸார்)
காத்தான்குடி மீடியா போரத்தின் 25 ஆவது வருட நிறைவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடலும் கடந்த சனிக்கிழமை (14) போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் காத்தான்குடி கடற்கரை ஸஹா திருமண மண்டபத்தில் இரு அமர்வுகளாக நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபா கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் சிரேஷ்ட உப தலைவரும், ஊடக செயற்பாட்டாளருமான எஸ்.ஏ.கே.பழீலுர்ரஹ்மானுக்கு விசேட கொளரவம் வழங்கப்பட்டது.
இதன்போது காத்தான்குடி மீடியா போரத்தின் 25 ஆவது வருட நிறைவையொட்டி சிறப்பு மலரொன்று வெளியிடப்பட்டது. சிறப்பு மலா் தொடா்பான அறிமுக உரை விடிவெள்ளி பத்திாிகையின் பிரதம ஆசிரியா் எம்.பீ.எம்.பைரூஸ் அவா்களினால் நிகழ்த்தப்பட்டது.
அதனையடுத்து, கொழும்புப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இதழியல் டிப்ளோமா பாடநெறியினை பூர்த்தி செய்த காத்தான்குடி மீடியா போரத்தின் ஏழு உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆயுட்காலத் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் உதயம் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கலாபூஷணம் அல்ஹாஜ் என்.எம்.அமீன், மட்டக்களப்பு மாநகர முதலவர் சிவம் பாக்கியநாதன், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ஆகியோர் உரையாற்றினர்.
25 ஆவது வருட நிறைவு விழாவின் இரண்டாவது அமர்வு காத்தான்குடி கடற்கைரைத் திடலில் நடைபெற்றது இதன்போது ஊடகவியலாளர்களின் கலை நிகழ்ச்சிகளாக பாடல்கள், நாடகம் கவிதை ஆகியன இடம்பெற்றன.
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 25 ஆவது வருட நிறைவு விழாவில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடிக் கிளையின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி), ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜவாஹிர் (பலாஹி), ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதவி தாங்குனர்கள், காத்தன்குடி நகர சபை உறுப்பினர்;கள், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், காத்தன்குடி பிரதேச முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் மற்றும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.