காத்தான்குடி பொலிஸாரின் மனிதாபிமானம்; வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி.!!!
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 25 தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட. மக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், பொலிஸாரின் மனிதாபிமான செயற்பாடாக இந்நிவாரணப் பொருட்கள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதி ஏ.ஆர்.என். அழககோன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.





