காத்தான்குடி பொலிஸார் மீதான; மட்டு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் – அரையாண்டு பரிசோதனை.!!!
(ஜே.கே)
கத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிசார் மீதான அரையாண்டு பரிசோதனை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இன்று (21) நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்நாயகாவின் முன்னிலையில் உதவி பொலிஸ் பரிசோதகர்கள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரையாண்டு பொலிஸ் பரிசோதனையில் பங்கு கொண்டனர்.
பொலிசார் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் பொலிஸ் வாகனங்கள் கட்டிடங்கள் என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.















