உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 7, 2025

Hot News

தலைக்கவசம் அணியாதோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை; காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்சரிக்கை.!!!

(எம்.ஐ.அப்துல் நஸார்)

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பி.ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய காத்தான்குடி முஹைதீன் (அல்-அக்ஸா) ஜுப்ஆப் பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை (06) ஜும்ஆத் தொழுகையின் பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போதே தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

அவர் பொதுமக்கள் மத்தியில் மேலும் தெரிவித்ததாவது, அறிவுரைகளை மதிக்காது செயற்பட்டமையினால் 21 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் ஏற்கவே அல்-அக்ஸா பள்ளவாயலுக்கு முன்னால் தலைக்கவசமின்றி பயணித்ததற்காக எச்சரிக்கப்பட்டிருந்தார்.

சிலர் பொலிஸாருக்கு பயந்து தலைக்கவசம் அணிந்தாலும் அதற்கான கிளிப்பினை பொருத்துவதில்லை. அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றின் தலைக்கவசம் அணிந்த போதிலும் அதற்கான கிளிப்பினை பொருத்தாததனால் குறித்த நபர் விழுகின்றபோது தலைக்கவசமும் கழன்று விட்டதால் தலையில் அடிபட்டு அந்த நபர் உயிரிழந்தார்.

ஒன்றிற்கு மேற்பட்டோரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கின்றனர். இதுவும் ஆபத்தானதாகும்.

நாளைய தினம் பெருநாளைக் கொண்டவுள்ள நீங்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் உங்கள் உறவுகளுக்கு அதன் ஆபத்தை உணர்த்துங்கள். இந்தத் தகவலை அவர்களுக்குச் சொல்லுங்கள். சமூக வலைத்தளங்கள் ஊடாக இதனைப் பரப்புங்கள் என கேட்டுக் கொள்கின்றேன்.

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கு அபராதத் தொகைக்கான சிட்டை வழங்கப்படமாட்டாது. ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் வாகனத்தைச் செலுத்தியதாகக் குறிப்பிடப்பட்டு அவர்கள் நேரடியாக நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

நாங்கள சீருடை அணிந்திருப்பது உங்களது உயிர்களைப் பாதுகாப்பதற்காகவேயாகும். எனவே எமது அறிவுரைளை மதித்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன். வீதிப் பாதுகாப்பு தொடர்பான அறிவுரைகளை வழங்குவதற்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித் தந்த பள்ளிவாயலின் இமாம்கள் மற்றும் பள்ளிவாயல் நிருவாக சபையினருக்கும் எனது நன்றிகள் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்போது புதிய காத்தான்குடி முஹைதீன் (அல்-அக்ஸா) ஜும்ஆப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் எம்.ஐ.எம்.ஜவாஹிர், பள்ளிவாயல் நிருவாகிகள், இமாம்கள் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related News

Total Websites Views

Total Views: 183357

Search

விளம்பரங்கள்