காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தமிழ், முஸ்லிம், பௌத்த மக்கள் கலந்து கொண்ட; மாபெரும் ஐஸ்கிரீம் தன்சல்.!!!
(ஜே.கே)
வெசாக் வாரத்தையொட்டி காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த ஐஸ் கிரீம் தானம் வழங்கும் நிகழ்வு இன்று மதியம் பொலிஸ் நிலையம் முன்பாக சிறப்பாக இடம் பெற்றது.
இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எம்.ஐ.ரத்றாநாமக்காபிரதம அதிதியாக கலந்து கொண்டார் .உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தன்சல் வழங்கினர்.
இதன் போது வீதியினால் சென்ற பொது மக்களுக்கு ஐஸ்கிரீம் தானம் வழங்கப்பட்டன.
தமிழ்,சிங்கள, முஸ்லிம் என சகல இன மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல்லாயிரம் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.





