காத்தான்குடி நகரசபையின் ஒழுங்கு விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை.!!!
நோன்பு காலத்தில் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துதல் தொடர்பான ஒழுங்குகள் முறையாக நடைபெறுகிதா என்பதை அறிய இன்றை தினம் 08.03.2025 ஆம் திகதி நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் அடங்கிய குழு களவிஐயம் ஒன்றினை மேற்கொண்டது.
12 மணி தொடக்கம் 3 மணி வரையில் நடாத்தப்பட்ட வகுப்புக்கள் உடனடியாக கலைக்கப்பட்டதுடன் நடாத்தியவர்களுக்கு இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இனிமேல் இவ் ஒழுங்குகளை மீறும் நடாத்துனர்களுக்கு எதிராக நகர சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்வதுடன்
மேலும் இது தொடர்பான முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் 065 22 45925 எனும் தொலைபேசி இலக்கம் மூலம் அல்லது kattankudy.uc@gmail.com எனும் மின்னஞ்சல் மூலம் வழங்க முடியும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
செயலாளர்
காத்தான்குடி நகர சபை

