காத்தான்குடி நகர சபையின் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் கடமையேற்பு.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு காத்தான்குடி நகர சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர்கள் இன்று (02) நகர சபை செயலாளர் அவர்களின் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்ததுடன் , உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.