காத்தான்குடியில் வீதிகளுக்கு காப்பற் இடும் வேலைகள்; சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பு .!!!
கடந்த 2023ம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட உலக வங்கியின் நிதி அளிப்பிலான ” இனைப்பாக்கம் உள்ளடங்களான அபிவிருத்தி செயற்திட்டம் ” (ICDP )கீழ் அப்போதைய சுற்றாடல் அமைச்சர் அல் ஹாபீஸ் நசீர் அஹமத் அவர்களினால் காத்தாங்குடி மற்றும் அதன் அயல் பிரதேசங்களுக்கு சுமார் 9 Km வீதி அபிவிருத்தி கான நிதி பெற்றுத் தரப்பட்டிருந்தது
இதன் அடிப்படையில் தற்போது பாலமுனை கர்பலா வீதி காத்தான்குடி தீன் வீதி வேலைகள் முற்றாக முடிவுறுத்தப்பட்டுள்ளன
இதன் அடுத்த கட்டமாக பூநொச்சிமுனை மஞ்சந்தொடுவாய் பிரதேசத்து மக்களின் மிக நீண்ட கால தேவையாக இருந்ததும் சுமார் 20 வருடங்களுக்கு மேல் சேதம் அடைந்து காணப்பட்ட புதிய பாலமுனை வீதி மற்றும் பதிரியா வீதி என்பவற்றுக்கான காப்பற் இடும் பணி இன்று காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
இந்நிகழ்வில் கௌரவ கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் UH.அப்துல்லா மற்றும் இவ்வீதி வேலை திட்டத்தினை இப்பிரதேசத்திற்கு கொண்டு வந்தற்கு காரண கர்த்தாவாக இருந்த முன்னாள் சுற்றாடல் அமைச்சரின் பிரதேச இணைப்பு செயலாளராக செயல்பட்ட அரசியல் சமூக செயற்பாட்டாளர் ஆதம் எஹ்யா மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய செயற்பாட்டாளர்களான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ULMN.முபீன் முன்னாள் நகர பிதா மர்சூக் அஹமட் லெப்பை காத்தான்குடி தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் MM நசீர் மட்டக்களப்பு மாநகர சபை மஞ்சந் தொடுவாய் வட்டார தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ACM. லத்தீப் அல் பரக்கத் மீனவர் சங்க தலைவர் SHA.அசிஸ் பூநொச்சிமுனை முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் SL. மனாப் மற்றும் பிரதேச தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள.
இந்த புதிய பாலமுனை வீதியானது கடந்த 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னால் ராஜாங்க அமைச்சர் மர்ஹும் அஹமட் பரித் மீராலெவ்வை அவர்களின் தூரநோக்கு சிந்தனையுடன் அமைக்கப்பட்ட வீதியாகும். அதாவது பாலமுனையில் இருந்து கர்பலா வீதி ஊடாக வந்து காத்தான்குடி கடற்கரை வீதி சந்ததியினை அடைந்து அங்கிருந்து தற்போதைய அல் அக்சா பள்ளி வீதியில் ஆரம்பித்து பதுரியா பிரதேசம் மஞ்சந்தொடுவாய் பிரதேசம் பூநொச்சிமுனை பிரதேசம் என்பவற்றை இனைக்கும் முகமாக அமைக்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்க து. கடந்த காலத்தில் இவ் வீதி ஊடாக பஸ் போக்குவரத்தும் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். வீதி வேலைகள் நிறைவடைந்த உடன் மீளவும் பஸ் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட உள்ளதாக அதிதிகளால் தெரிவிக்கப்பட்டது.
இவ்விதி அபிவிருத்தி மூலம் மஞ்சந் தொடுவாய் பூநொச்சிமுனை பிரதேசங்கள் பெரும் முன்னேற்றம் அடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப் பிரதேசத்தின் வீதி அபிவிருத்தி திட்டத்தில் முன்னுரிமை கொண்டு செயல்பட்டு வருகின்றதை காணக்கூடியதாக உள்ளது.
இவ்வீதியில் மொத்த நீளம் 2.75km மொத்த செலவு மதிப்பீடு 132 மில்லியன் ஆகும்.