காத்தான்குடியில் இளைஞர்களுக்கான; சமூக வேலைத் திட்டம் அங்குரார்ப்பணம்.!!!
(எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்)
நல்லிணக்கத்திற்கான மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களை இணைத்தல் எனும் சமூக வேலைத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (07) திங்கட்கிழமை காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
ஆய்வுக்கும் மேம்பாட்டிற்குமான இஸ்லாமிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி அனீஸா பிர்தெளஸ் தலைமையி இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் கலந்து கொண்டார்.
அதிகளவான இளைஞர் யுவதிகளின் பங்கு பற்றுதலுடன் காத்தான்குடி ஜம்இயத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஜே.எம். அப்துல் கபூர் மதனி , பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல் நசூருதீன், மத்தியஸ்த சபைத் தலைவர் எம்.மஹ்சூம், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைவர் எம்.சீ.எம்.ஏ.சத்தார், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.இர்ஷாத் , ஜம்இயத்துல் உலமா சபை செயலாளர் எம்.ஜவாஹீர் மெளலவி பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்







