பாராளுமன்றத்தில் ஜனாதிபதி – கட்சித் தலைவர்கள் முக்கிய சந்திப்பு.!!!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இடையிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையால் உலகளவில் உருவாகியுள்ள வலுசக்தி நெருக்கடி மற்றும் அதன் தாக்கம் இலங்கையின் வலுசக்தித் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி விரிவான விளக்கமளித்தார். மேலும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் கட்சித் தலைவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவுப் ஹக்கீம், மனோ கணேசன் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர்.
அத்துடன், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.