லொறி – டிப்பர் நேருக்குநேர் மோதி விபத்து; ரிதிதென்னையில் சம்பவம்.!!!
(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதி பஸ் டிப்போவுக்கு அருகாமையில் லொறியும் டிப்பரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (3) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து வந்த லொறியுடன் எதிரே வந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், லொறி சாரதி காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டிப்பரை செலுத்தி வந்த சாரதி விபத்து நடந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.