அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில்: அரசின் முக்கிய அறிவிப்பு.!!!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் மற்றும் இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகள் நாளை (28) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ்
1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு ரூபா 11,234,713,750.00 நிதி விநியோகிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
அத்துடன், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக,
618,440 பயனாளிகளுக்கு ரூபா 3,092,200,000.00 நிதி விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக,
248,454 பயனாளி குடும்பங்களுக்கு ரூபா 2,235,137,500.00 நிதி விநியோகிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக,
68,183 பயனாளிகளுக்கு ரூபா 340,915,000.00 நிதி விநியோகிக்கப்பட்டு, அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த நிதியுதவி, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவியாக அமையும் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.