மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதியதில் விபத்து; இளைஞன் பலி.!!!
மொனராகலை – வெல்லவாய வீதியில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
சாரதி கவனக்குறைவாக வீதியின் குறுக்கே காரை செலுத்திய போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்து காருடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் வைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் காயமடைந்து வெல்லவாய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது 22 வயதுடைய சகோதரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.