புதிய காத்தான்குடி பிர்தெளஸ் பள்ளிவாயலின் ஏற்பாட்டில்; கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சிந்னையில் உதித்த, அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டமான கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புதிய் காத்தான்குடி 167A கிராம சேவகர் பிரிவில் இயங்கி வருகின்ற பிர்தெளஸ் பள்ளிவாயல் மற்றும் அதனைச் சூழவுள்ள சுற்றுச் சூழலை தூய்மைப்படுத்துகின்ற ஒருநாள் வேலைத்திட்டம் இன்று (26) காலை 6.00 மணி தொடக்கம் 9.00 மணி வரை பிர்தெளஸ் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
புதிய காத்தான்குடி பிர்தெளஸ் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது பள்ளிவாயலின் தலைவர் நியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், சமூக மேம்பாட்டுக்கான ஒன்றியத்தின் உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், மஹல்லாவாசிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பள்ளிவாயலின் சுற்றுச் சூழல், மற்றும் வீதிகளில் வீசப்பட்ட பொலித்தீன் கழிவுகள், வீதியோரங்களில் வீசப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
Join Now Spot News24
Whatsapp Group Link : https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5













