எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க புதிய நடவடிக்கை: அமைச்சுகளுக்கு ஒருங்கிணைப்பதற்காக 5 அதிகாரிகள் நியமனம் – QR முறை விரிவாக்கம்.!!!
அனைத்து அமைச்சுகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் ஐந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விவசாய நிலங்கள் உட்பட எரிபொருள் தேவையுள்ள ஏனைய துறைகளுக்கும் QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அமைச்சின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஏற்படும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விநியோக சிக்கல்களை அடையாளம் காண்ந்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒருங்கிணைந்து அவற்றிற்கு தீர்வு காணும் பணியை மேற்கொள்வது இந்த அதிகாரிகளின் முக்கிய பொறுப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதி செயலகத்தில் கூடின போது இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

