உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு.!!!

-நூருல் ஹுதா உமர்-

அண்மையில் காலமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூரும் நிகழ்வு, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ். லோகநாதன் தலைமையில் இன்று (28) காரைதீவில் மிகுந்த மரியாதையுடனும் உணர்வுபூர்வ சூழலிலும் நடைபெற்றது.

நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் செல்லையா ராசைய்யா, சிரேஷ்ட சட்டத்தரணி அன்சார் மௌலானா, சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ரீ. சகாதேவராஜா, செல்லையா பேரின்பராஜா, த. தர்மேந்திரா, நூருல் ஹுதா உமர், எம்.ஐ. சம்சுதீன், ஜலீல் ஜீ உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மறைந்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்கள் ஊடகத் துறையில் ஆற்றிய அர்ப்பணிப்பு, நேர்மையான செய்தியளிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வை சிறப்பாக நினைவுகூர்ந்தனர். பல தசாப்தங்களாக ஊடகத் துறையில் பணியாற்றிய அவர், உண்மை மற்றும் நியாயத்தை முன்னிறுத்திய செய்தியாளராகப் பரவலாகப் பாராட்டப்பட்டவர் என உரையாற்றுபவர்கள் குறிப்பிட்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், மறைந்தவரின் ஆன்மா சாந்தியடைய மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவருடன் இணைந்து பணியாற்றிய சக ஊழியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு, அவரது மனிதநேயப் பண்புகளையும் தொழில்முறை நேர்மையையும் பாராட்டினர்.

சங்க தலைவர் லோகநாதன் தனது தலைமையுரையில், “ஏ.எல்.எம். சலீம் அவர்கள் ஒரு சாதாரண ஊடகவியலாளர் அல்லர்; சமூகத்தின் குரலாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய உண்மைப் போராளியாகவும் திகழ்ந்தவர்” எனக் குறிப்பிட்டார். மேலும், இத்தகைய ஆளுமையை இழந்தது ஊடக உலகிற்கும் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வின் நிறைவில், மறைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கப்பட்டதுடன், அவரின் சேவையை நிலைநிறுத்தும் வகையில் எதிர்காலத்தில் நினைவு நிகழ்ச்சிகள் மற்றும் சமூகப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த நினைவேந்தல் நிகழ்வு, ஒரு ஊடகவியலாளரின் வாழ்க்கைப் பயணத்தையும் அவரது சமூகப் பங்களிப்பையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியதோடு, உண்மையையும் பொறுப்பையும் காக்கும் ஊடகப் பணியின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 936253

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time