ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்தார் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க.!!!
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அமெரிக்க நேரப்படி
23ஆம் திகதி பிற்பகல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கேட்போர் கூடத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க்கை சந்தித்தார்.
உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், ஜனாதிபதி திசாநாயக்கவை அன்புடன் வரவேற்று இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி வழக்கறிஞர் ஜெயந்த ஜெயசூரியா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.




