சவூதி இளவரசர்-உக்ரைன் அதிபர் சந்திப்பு: இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து கலந்துரையாடல்.!!!
சவூதி இளவரசர் ஜித்தாவில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ நடவடிக்கைகள், உக்ரைன் நெருக்கடிக்கான சமீபத்திய தகவல்கள், இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, சவூதி அரேபியாவில் பயணத்தின் போது, உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சவூதி பாதுகாப்பு அமைச்சகத்துக்கிடையேயான இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதைக் குறிப்பிட்டார்.
ஜெலென்ஸ்கி தனது அதிகாரப்பூர்வ X (முந்தைய Twitter) கணக்கில் கூறியதாவது:
“உக்ரைனியர்கள் அதே வகையான பயங்கரவாத தாக்குதல்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எதிர்கொண்டு வருகின்றனர்.”
இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்பெறுவதால், மத்திய கிழக்கு மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழலில் புதிய நிலைமைகள் உருவாகும் என வலியுறுத்தப்படுகின்றது.

