முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களுடன்; கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு.!!!
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு நேற்று (06) அமைப்பாளரும் வேட்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் இல்லத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் ஓட்டமாவடி-01ம் வட்டார வேட்பாளருமான ஹபீப் றிபான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் கோறளைப்பற்று, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி, கோறளைப்பற்று வடக்கு – வாகரை ஆகிய பிரதேச சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பட்டியல் வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது தேர்தல் பிரசார முன்னெடுப்புக்கள், நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
– ஊடகப்பிரிவு


