ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்; முக்கிய கலந்துரையாடல்.!!!
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அட்டாளைச்சேனை, இறக்காமம், காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று (ஜூன் 22) அம்பாறை நகரில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, பிரதித் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம். ஐ. எம். மன்சூர், கட்சியின் பிரதி தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ். எம். ஏ. கபூர், பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ காதர், மாவட்ட செயற்குழு செயலாளர் ஏ. சி. சமால்தீன் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள், தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்தக் கலந்துரையாடல் அம்பாறை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.