அவசரகால நிலை 1 மாதத்திற்கு நீடிப்பு: பாராளுமன்றம் 104 வாக்குகளால் ஒப்புதல்.!!!
இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான யோசனை இன்று (06) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் யோசனைக்கு ஆதரவாக 106 வாக்குகள், எதிராக 02 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன, இதனால் அவசரகால நிலை நீடிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த அவசரகால நிலை கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பிரகடனப்படுத்தப்பட்டது. ‘டித்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, பொதுப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாக இது நடைபெற்றது.
பாராளுமன்றத்தில் இதனைப் பற்றி உரையாற்றிய பிரதமர் ஹரினி அமரசூரிய, அரசு ஒருபோதும் அவசரகாலச் சட்டத்தை ஊடகங்களை நசுக்க அல்லது எந்தவொரு குழுவினரையும் ஒடுக்க பயன்படுத்தாது என்றும் உறுதியளித்தார்.
