மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளை வலுப்படுத்த; 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைப்பு.!!!
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (15) திங்கள் கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்தியத்தின் பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். தனுஷியா ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் புதிய வைத்தியர்களுக்கு மாவட்ட சுகாதார சேவைகள் தொடர்பான விரிவான அறிமுகத்தை வழங்கினார்.
மேலும், பொறுப்பு வைத்தியர்கள் தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்து, புதிய வைத்தியர்களுக்கான பணிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.
இந்த புதிய வைத்தியர்களின் இணைவு, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.
















