உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
சமூக ஊடக உலகில் பெண்கள்: வாய்ப்புகளும் அதிகரிக்கும் சவால்களும்.!!!
Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!

Share :

தம்பலகாமத்தில் பரபரப்பு: சிறிய வகை எறிகணை மீட்பு.!!!

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு பகுதியில் நேற்று (04) பகல் வேளையில் சிறிய வகை எறிகணை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை கவனித்ததையடுத்து, உடனடியாக தம்பலகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், குறித்த எறிகணையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இது யுத்த காலத்தில் கைவிடப்பட்ட அல்லது புதையுண்டிருந்த பழைய எறிகணையாக இருக்கக்கூடும் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் வேறு ஏதேனும் வெடிபொருட்கள் உள்ளனவா என்பதை கண்டறியவும் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது பழைய வெடிபொருட்கள் காணப்பட்டால் அவற்றைத் தொடவோ அல்லது கையாள முயற்சிக்கவோ கூடாது என்றும், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்க வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 742846

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time