இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 30 பேர் காயம்.!!!
இன்று (29) காலை பெலியத்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 30 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டியாராச்சி வளைவில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
காயமடைந்தோர் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவி தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.