2 அரச பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் வைத்தியசாலையில் அனுமதி.!!!
தங்காலை, மஹாவெல பகுதியில் இன்று (27) பிற்பகல் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற மற்றொரு இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நகுலுகமுவ மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.