உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உணவு நஞ்சானதால் மட்டுநகர் பாடசாலைகளின் மாணவர்கள்; வைத்தியசாலைகளில் அனுமதி.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி விநாயகர் வித்யாலயம் மற்றும் கோட்டைமுனை கனிஷ்ட வித்யாலயத்தில் இன்று (04) பாடசாலை இடைவேளையின் போது குறித்த இரு பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை சிற்றுண்டி சாலையில் வாங்கிய உணவு ஒவ்வாமையினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மாணவர்களுக்கு வாந்தி, தலை சுற்று ஏற்பட்டதன் காரணமாக உடனடியாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் துரிதமான நடவடிக்கை காரணமாக ஆம்புலன்ஸ் வண்டிகளில் துரிதமாக வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரசேவை தொற்றா நோய்கள் பிரிவின் வைத்திய அதிகாரி எஸ் உதயகுமார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பாடசாலை சிற்றுண்டி சாலைக்கு ஒரு நபரே உணவுகள் வினியோகித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது மாணவர்கள் குறித்த பாடசாலையில் புட்டு வாங்கி உண்டமையினால் இந்த உணவு ஒவ்வாமை நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Related News

Total Websites Views

Total Views: 181263

Search

விளம்பரங்கள்