வாழைச்சேனை – மியான்குளம் பிரதான வீதியில் விபத்து; நான்கு பேர் காயம்.!!!
மோட்டார் சைக்கிள் – ஆட்டோ விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மியான்குளம் பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம்.நெளபர் உட்பட மோட்டார் சைக்கிளில் வந்த பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடாமாற்றப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருன்றனர்.