வாவியில் குளிக்கச் சென்ற; நான்கு பேர் நீரில் மூழ்கி பலி.!!!
பொலன்னறுவை வாவியில் குளிக்கச் சென்றவர்களில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக திம்புலாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரத்மலானையில் இருந்து திம்புலாகலவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றவர்களில் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் திம்புலாகல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.