முதல்வர் தலைமையில் இடம்பெற்ற; வெள்ள அனர்த்த முகாமை தொடர்பான கலந்துரையாடல்.!!!
எதிர்வரும் காலங்களில் வெள்ளநீர் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட்டமிடல் மற்றும் அதற்கான செயல் திட்டங்களை உருவாக்கும் நோக்கில், இன்று (18) கௌரவ மாநகர முதல்வர் அவர்களின் தலைமையில் ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் ஒரு பகுதியாக வீதி திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி குழுவினர் பங்கேற்று, நகரின் வெள்ளம் பாதிக்கும் வீதிகள், தேக்க நிலைகள், வடிகால் முறைமை மற்றும் சாலைத்திட்டங்கள் தொடர்பான முக்கிய விவாதங்களை மேற்கொண்டனர்.
மாநகர முதல்வர் அவர்கள், வெள்ள நிலைகளை தடுக்க பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, அவசியமான இடங்களில் உடனடி நடவடிக்கைகள் எடுக்க உத்தரவு வழங்கினர்.

