கொழும்பு மத்திய பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளை பார்வையிட்ட – விமானப்படைத் தளபதி.!!!
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை இலங்கை விமானப்படைத் தளபதி இன்று (24) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, நடைபெற்று வரும் கட்டுமான நடவடிக்கைகள், பணிகளின் தற்போதைய முன்னேற்ற நிலை, மேலும் பொதுமக்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள நவீன வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விரிவான விளக்கங்களை அவர் பெற்றுக் கொண்டார்.
பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் சீரான போக்குவரத்து சேவைகளை வழங்கும் நோக்குடன், பேருந்து நிலையத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தும் வகையில் இந்த புனரமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் கட்டுமான பணிகளுடன் தொடர்புடைய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

