கல்லடி பாலத்தில் மீட்கப்பட்ட ஆணின் உடலம் – பொலிசார் தீவிர விசாரணை.!!!
மட்டக்களப்பில் கல்லடி பாலம் அருகிலுள்ள வாவியில் மிதந்த நிலையில் காணப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை (26) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதை கண்ட மீனவர்கள் அதனை கரைக்கு கொண்டு வருவதற்கு உதவி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 45 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கல்லடி பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
