ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை – பங்களாதேஷ் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!!!
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களுக்கு, கடந்த ஆண்டு (2024) போராட்டங்களின் போது நடந்த மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்காக (Crimes Against Humanity) அந்நாட்டுச் சிறப்புத் தீர்ப்பாயம் (ICT) மரண தண்டனை விதித்து இன்று (17) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற மாணவர் தலைமையிலான போராட்டங்களின் போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு உத்தரவிட்டதாக ஷேக் ஹசீனா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துசமான் கான் கமல் (இவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது).
ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவர் இல்லாத நிலையில் (In Absentia) விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றும் இந்தத் தீர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் நிராகரித்துள்ளது.