வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு; நிதி உதவி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கி வைப்பு.!!!
(முபாறக் அஸ்லம்)
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர உதவ கற்றலுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான நிதி உதவி மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு 2025.12.14 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இந்த நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் இடம்பெற்றது. கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.
அரநாயக்க பௌத்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள முகாமில் தற்காலிகமாக தங்கியிருக்கும் வெள்ளப் பாதிப்புக்குள்ள பாடசாலை மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலைகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற பயன்படும் நீர் இறைக்கும் இயந்திரமும் கையளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம், இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் மீளுருவாக்க நடவடிக்கைகளுக்கும் உதவியாக அமைந்தது.


