ஜொன்ஸ்டன் உட்பட 5 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.!!!
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும், வரும் பிப்ரவரி 13ஆம் தேதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக வழங்கப்பட்ட நீதிமன்ற ஆணையின்படி, இன்றைய விசாரணைக்காக அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன் பின்னர், வழக்கை பரிசீலனை செய்த நீதிமன்றம், சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.