கத்தாரில் இருந்து இலங்கைக்கு – 55 மில்லியன் ரூபா மனிதாபிமான உதவி.!!!
கத்தாரில் இருந்து 55 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பணிகள்!
இலங்கையில் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், கத்தார் சாரிட்டி (Qatar Charity) நிறுவனம் 55 மில்லியன் ரூபாய் பெறுமதியான அவசர நிவாரணத் திட்டமொன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
கத்தார் அபிவிருத்தி நிதியத்தின் (Qatar Fund for Development) நிதியுதவியுடனும், இலங்கையிலுள்ள கத்தார் தூதரகத்தின் பூரண ஆதரவுடனும் இந்த நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் ஊடாக, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள 1,800 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுகள் மற்றும் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
மேலும், உள்ளூர் அனர்த்த மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் (Disaster Management Centre) இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான (Search and rescue) நவீன உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.