பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனக் கூறமாட்டேன் – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.!!!
பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் எனத் தாம் எந்தக் கட்டத்திலும் கூறமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பதவி விலகல் குறித்து அழைப்பு விடுப்பது தமது நிலைப்பாடு அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை தொடர்பில் அனைவரும் பொறுப்புணர்வுடன் அணுக வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, பிரச்சினைகளுக்கு ஜனநாயக முறையில் தீர்வுகளைத் தேடுவதே சிறந்த வழி எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.