உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 12, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

மத நல்லிணக்கத்தை வலுப்படுத்திய இப்தார் நிகழ்வு: உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்பு.!!!

(நூருல் ஹுதா உமர்)

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வு ஒன்று நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வு நாவிதன்வெளி சுமங்கலா மண்டபத்தில் நடைபெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தின் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக ஐ.எல்.எம். மாஹீர் மற்றும் தர்மதாஸ ஆரியதாச ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் உரையாற்றிய அவர்கள், இவ்வாறான மத சார்பற்ற ஒன்றுகூடல்கள் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துகின்றன எனக் குறிப்பிட்டனர்.

மேலும், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கே. புவனரூபன், சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் பி. சதீஷ்கரன், சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக, இஸ்லாமிய மதகுருமார்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டு நோன்பின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் சகவாழ்வு பற்றிய உரைகளையும் விசேட பிரார்த்தனைகளையும் நடத்தினர்.

ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு, பிரதேசத்தில் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 701504

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time